இறைமக்கள் அகமகிழ்ந்து வருகின்ற திருப்பவனி
திருச்சபை இணைந்து கிறிஸ்துவோடு தருமே தியாகப்பலி
 

வாராய் இறைதிருக்குலமே வாழ்வாய் பேறுடனே - 2  

மலருடன் சேரும் யாவுமே மணம் பெற்று வாழ்தல் நீதியே - 2
  • புவிவாழ்வை நாமும் தரவே இறைமாண்பை இன்றே பெறவே
விரைவாய் வருவோம் தேவன் அருள் பெறுவோம்
இறைவன் நிழலில் வாழ்வின் பொருள் பெறுவோம் -வாராய்

மகிழ்வுடன் பாடும் வேளையே மனங்களின் சோர்வை நீக்குமே - 2
திருவாழ்வை தேடி பெறுவோம் மறைவாழ்வின் நன்மை அடைவோம்
பணிவாய் குலமாய் இயேசு பதம் இணைவோம்
மறையின் வழியில் வேத ஒளி பெறுவோம்  -வாராய்