அருட்கரம் தேடி உன் ஆலயபீடம் அலையலையாக வருகின்றோம் 
அருவியாய் வழியும் உன் 
அருளினில் நனைய
ஆனந்தமாக வருகின்றோம்


 1 . (ஆயிரம் ஆயிரம் ஆசைகளால் 
ஆடிடும் ஓடமாய் எம் வாழ்க்கை) - 2 
முழ்கிடும் வேளையில் எம் இறைவா
உன் கரம் தானே எம்மைக் கரை சேர்க்கும்
பெரும் புயலோ எழும் அலையோ 
நிதம் வருமோ ஒளியிருக்க -2

நாளுமே எம்மைக் காத்திடும் உந்தன் .......       
                  

2 . (ஆறுதல் வேண்டும் எம் இதயங்களோ
அன்பினைத் தேடி அலைகின்றதே) -2
தேற்றிட விரையும் எம் தலைவா- உம்
தெய்வீக கரம் தானே எமைத் தேற்றும்

(கொடும்பிணியோ வரும் பரிவோ
துயர் வருமோ துணையிருக்க) -2

நாளுமே அன்பால் ஆறுதல் வழங்கும்....