சகாயத்தாயின் சித்திரம் நோக்கு
அபாயம் நீக்கும் அன்னையின் வாக்கு
எத்துணைக் கனிவு
எத்துணைத் தெளிவு
வேண்டிடும் மனதுக்கு
வரும் நிறைவு
                                   (சகாயத் தாயின்)


1. (குத்திப் பிளந்திடும் ஈட்டியும் ஆணியும்
     கொடூரச் சிலுவையும் கண்டு மிரண்டு) - 2
    தத்தித் தாய்மேல் சாய்ந்திடும் இயேசுவை
     சதா உன் நினைவில் பதித்திடுவாய் நீ - 2

2.  (அம்மா என்று கூவ
     அபயம் தந்து வருவாள்) - 2
     இம்மாநிலத்தில் இவள் போல் - 2
     இரங்கும் தாயும் உளரோ - 2