என் ஆன்மா எந்நாளுமே
ஆண்டவரை ஏற்றி ஏற்றிப் போற்றுகின்றது
என் மீட்பரை நினைத்து நினைத்து
எந்தன் நெஞ்சம் மகிழுகின்றது - 2


 1. ஏழைகளை எளியவரை உயர்த்தினார்
பல இன்னல்படும் உள்ளங்களைத் தேற்றினார் - 2

செல்வரை வெறுங்கையராய் அனுப்பினார் - 2
நெஞ்சில் செருக்குற்ற மனிதரையே சிதறடித்தார் - 2


 2. அடிமைகளை அன்புடனே நோக்கினார் - அவர்
ஆள்பவரின் ஆணவத்தை நீக்கினார் - 2 

தாழ்ந்தோரை மேன்மையாக உயர்த்தினார் - 2
வாழ்வில் வீழ்ந்தோரைக் கருணையினால் ஆதரித்தார் - 2