வைகறை பொழுதின்
வசந்தமே நீவா...
விடியலை தேடும்
விழிகளில் ஒளிதா...
வாழ்வு மலர்ந்திட
வான் மழையென வா...
வழி இருள்தனிலே
வளர்மதி என வா...
இங்கு பாடும் இந்த ஜீவனிலே 
பரமனே நீ வா..... (வைகறை) 


1. (அலைகளில்லா கடல் நடுவே 
பயணமென என்வாழ்வு...
அமைதியெங்கும் அமைதியென 
பயணமதை நான் தொடர) - 2

இறைவா என் இறைவா
இதயம் எழுவாய்
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - 

எந்தன் வாழ்வு ஒளிர
வாசல் திறந்து
எனை அழைத்திட வா..(வைகறை)


 2. (இடர் வரினும் துயர் வரினும் 
இன்னுயிர் தான் பிரிந்திடினும்... 
எனைப்பிரியா நிலையெனவே 
இணைப்பிரியா துணையெனவே) -2

இறைவா என் இறைவா
இதயம் எழுவாய்
நிறைவாய் எனிலே நிதமும் உறைவாய் - 

எந்தன் வாழ்வு ஒளிர
வாசல் திறந்து
எனை அழைத்திட வா..(வைகறை)