இயேசு இரட்சகர் பெயரைச் சொன்னால்
எதுவும் நடக்குமே...
அவர் இதயத்தோடு கலந்துவிட்டால்
எல்லாம் கிடைக்குமே -2

1. (வாடி கிடந்த உயிர்களெல்லாம் 
வாழவைத்தாரே...) -2

(அவர் வாழ்வு சத்யம் ஜீவனுமாய் 
நன்மை செய்தாரே..)- 2.
                                   (இயேசு இரட்சகர்)

2.(பரம பிதா ஒருவர் என்று 
வகுத்துச் சொன்னவர் இயேசு..) -2

(பாசம் அன்பு கருணையோடு உலகை கண்டவர் இயேசு...) -2
                                    (இயேசு இரட்சகர்)